கிருஷ்ணகிரி, டிச.11- கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஓசூர் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா) சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயுவிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் மூர்த்தி, செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.