புதுச்சேரி, ஜூலை 9- புதுச்சேரியில் அமைப்பு சாரா நல சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரிய விண்ணப்பத்தை 4 மாதத்திற்கு பிறகு நிராகரித்ததால் கோபமடைந்த தையல் கலைஞர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஆட்டோ ஓட்டு நர்கள், தையல் கலைஞர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் என்று பலதரப்பட்ட முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த தையல் கலை ஞர்கள், வீட்டு வேலை பணி செய்யும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 4 மாதங்களுக்கு மேலாகியும் விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து, புதுச்சேரி வர்த்தக சபை கட்டிடத்தில் இயங்கி வரும் அமைப்பு சாரா தொழிலாளர் அலுவலக அதிகாரிகளை முற்றுகை யிட்டு தையல் கலைஞர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன், தையல் கலைஞர்கள் சங்க நிர்வாகி மணிபாலன், வீட்டு வேலை பணி செய்வோர் சங்க நிர்வாகிகள் லாவண்யா,மாலதி ஆகியோர் அதிகாரியிடம் முறையீடு விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலனை செய்து இந்த நிதி ஆண்டு உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தினர். அதிகாரி உறுதி இதைத் தொடர்ந்து, 600 க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் விண்ணப்பத்தை உடனே பரிசீலனை செய்து உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற சிஐடியு சங்கத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக நல சங்க அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.