சென்னை, டிச.14- ஆரோக்கியமான மற்றும் நீடித்த சமூகத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் கால நிலை பள்ளிகள் தொடங்கப் பட்டுள்ளன. மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, குன்னூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதனை தொடங்கியுள்ளது. இதே போன்ற பள்ளிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, முதல் நிலையான உணவு உற்பத்தி, நீர் மற்றும் மின் சேமிப்பு பற்றிய கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த பள்ளிகள் செயல்படும். குன்னூரில் தமிழ்நாடு கல்வித் துறை மற்றும் கீஸ்டோன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் 10 காலநிலை பள்ளிகள் துவங்கப்பட்டன. இந்த பள்ளிகளுக்காக ஒருங் கிணைந்த கால நிலை பாடத்திட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது என்று மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் அறங்காவலர் கல்பனா கார் கூறினார். சிறப்புப் பயிற்சி பெற்ற உள்ளூர் இயற்கை ஆர்வலர்கள், பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள வானிலை நிலையங்களின் மாதிரிகள் மூலம் இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் நேரடியாக தங்க ளுக்குள்ளும், பெற்றோர் மற்றும் பெரி யோர்களுடனும் காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் பள்ளியில் இருந்தே அன்றாட வானிலை நிலவரத்தை கண்காணிக்கவும் உதவு கின்றன” என்றும் அவர் கூறினார்.