இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கன்னி அம்மன் கோவில் தெரு கிளையும், கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவமனையும் இணைந்து ஞாயிறன்று (டிச.29) எம்ஜிஆர் நகரில் ரத்ததான முகாம் நடத்தின. முகாமில் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் தீ.சந்துரு, விருகம்பாக்கம் பகுதித் தலைவர் சுந்தர், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் மோகன் உள்ளிட்டோர் சான்றிதழ்களை வழங்கினர். 58 பேர் ரத்த தானம் செய்தனர்.