ஒன்றிய பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் 14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிஐடியு, விதொச, தவிச சார்பில் ஏப்ரல்-5 டெல்லியில் நடைபெறும் பேரணியை விளக்கி உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு கவுரவ தலைவர் கே.தங்கராசு. விதொச நிர்வாகி ஏ.கே.முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், ஏ.தேவி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.விஜயகுமார், எம்.செந்தில், ஏ.வீராசாமி, வி.சாமிநாதன்.ஐ.ஷேக் சலாவுதீன்.எஸ்.வெங்கடேசன்.கே. சுந்தரபாண்டியன், பி.சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.