districts

img

ஓய்வூதியத்தை நம்பியே ஓய்வூதியர்கள் வாழும் நிலை ஆர்.இளங்கோவன் வேதனை

புதுச்சேரி, டிச.29 - ஓய்வூதியத்தை நம்பியே  வாழும் நிலைக்கு ஓய்வூ தியர்கள் தள்ளப்பட்டுள்ள தாக ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். ஓய்வூதியர் தினத்தை யொட்டி சிறப்பு கருத்தரங் கம் புதுச்சேரியில் வெள்ளிக் கிழமை (டிச. 29) நடை பெற்றது. அனைத்திந்திய ஓய்வூதியர்கள் அமைப்பின் தணிக்கையாளர் ஆர்.நடராஜன் தலைமை தாங்கி னார். சங்கத்தின் உதவி தலை வர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “நாடு முழுவதும் இன்றைக்கு 14 கோடி பேர் 60 வயதை  எட்டியுள்ளனர். இதில் 3.5 கோடி பேர்கள் தான்  ஓய்வூதியர்களாக உள்ள னர்” என்றார். நாட்டில் 60 வயதைக் கடந்த 75 விழுக்காடு முதிய வர்களுக்கு எவ்வித ஓய்வூதியம் இல்லை.  தங்க ளது பிள்ளைகள் அல்லது  மற்றவர்களை சார்ந்து வாழும் நிலையில் தான் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.கூட்டுக் குடும்பங்களாக இருந்த ஓய்வூதியர்கள் இன்றைக்கு தனித்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே தான் ஓய்வூதி யத்தை ஒன்றிய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  இதில் பல்வேறு அமைப் புகளின்  நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், சண்முகம், ராம கிருஷ்ணன், கலியமூர்த்தி, விஸ்வநாதன், டி.விட்டோ பாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.