districts

img

புதுப்பாளையம் ஆனந்த் மகள் மறைவு

கடலூர்,ஜன. 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாநகர குழு உறுப்பினர் ஆனந்த் மகள் வமிர்த சிவஜோதி (14) காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர குழு உறுப்பினரும் முன்னாள் சிபிஎம் நகர்மன்ற உறுப்பினருமான ஆனந்த்-தேவி ஆகி யோரின் மகள் வமிர்த சிவஜோதி உடல் நலக்குறைவால்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவ ருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புதுப்பாளையம் மாட்டுப்பட்டி தெரு வில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எம். மருதவாணன், வி. சுப்புராயன், ஜெ. ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.கே. பக்கீரான், டி.கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம்  மாநகர, ஒன்றிய குழு உறுப்பினர் களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், புதுப்பாளையம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.