அம்பத்தூர், செப். 2- ஆவடியில் இருந்து கூடுதலாக மாநகார பேருந்துகளை இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) சார்பில் சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புற நகர் பகுதியில் இருக்கும் மக்களும் அலுவல் மற்றும் பிற பணிகளுக்காக சென்னை நகருக்குள் வந்து செல்ல மாநகர பேருந்துகளே அதிகளவில் இணைப்பு வசதியாக இருக்கிறது. இந்த நிலையில், மேற்கு புறநகர் பகுதிகளில் மாநகர பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளதாக ஆவடி பகுதியில் வசிப்ப வர்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். கொரோனாவுக்கு முன்பு பட்டாபிராம் - பூந்த மல்லி இடையே ‘54 சி’ எண் கொண்ட 6 பேருந்து கள் 24 சேவைகள் இயக்கப்பட்டதாகவும், தற்போது இந்த சேவை பாதியாக குறைக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், கோயம்பேடு - பாண்டூர் (153பி), எம்கேபி நகர் - பட்டாபிராம் ( 121இ) மற்றும் பொன்னேரி - பட்டாபிராம் (536) ஆகிய வழித்தடங்களில் பேருந்து சேவையை எம்டிசி முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகவும் அவர்கள் புகார் கூறினர். இதனால், பீக் அவர் எனப்படும் காலை மாலை நேரங்களில் கூட 20 நிமிடங்கள்வரை காத்திருக்கும் சூழல் இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறு கின்றனர். மாநகர பேருந்துகள் அடிக்கடி இல்லாத சூழலில் அதிக கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோக் களில் செல்லும் நிலை இருப்பதாகவும் பட்டாபிரா மில் இருந்து அம்பத்தூர் பழைய பேருந்து நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் 30 ரூபாய் செலவாகிறது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு புறநகர் பகுதி யில் இருந்து நகருக்குள் செல்ல கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் பழையபடி இயக்க வேண்டும் என்று ஆவடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.