districts

img

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழுப்புரத்தில் புதனன்று (டிச. 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன்,  மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் முருகன் ஆகியோர் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கியதற்கு அமைச்சருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.