சென்னை, ஏப். 24- கோடை காலம் தொடங்கியுள்ள நிலை யில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் வெப்பத்தின் காரணமாக பாதிக் கப்படுகின்றனர். வெப்பம் வாட்டி வதைப் பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சி யாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கிய மானது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை, வேர்க்குரு, அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்சனை போன்றவை ஏற்படும். வெயிலினால் நம் உடலில் அதிகளவு நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் நாம் வெளியில் செல்லும் போது அதிகமாக தாகம் எடுக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். ஆனால் குளிர்ந்த நீரை குடிப்பதையே பலரும் விரும்புகின்றனர். குளிர்ந்த நீர் அல்லது பானங்கள் குடிக்கும் போது நமது தாகத்தை தணிக்க வும், புத்துணர்ச்சியுடன் உணர வைக்கவும் உதவுகிறது. ஆனால் குளிர்ந்த நீரை அதி களவு குடித்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பிரச்சனைகள் உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். நாம் குளிர்ந்த நீரை அருந்தும் நேரத்தில், இந்த வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உடல் ஆற்றலை வெளியேற்றும் நோக்கில் இயங்கு கிறது. அதாவது குளிர்ந்த நீர் உடலில் சம நிலையின்மையை (ஏற்றத்தாழ்வு) ஏற்படுத்தும். சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பது தொண்டை புண், எரிச்சல் மற்றும் மூக்க டைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதி கரிக்கிறது. குளிர்ந்த நீர் ரத்த நாளங்களை சுருங்கச் செய்து, தொண்டைப் பகுதிக்கு ரத்த ஓட்டத்தை குறைக்கும். குளிர்ந்த நீர் பருகுவதால் செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. குளிர்ந்த நீரை தொடர்ந்து குடிப்பது இதய துடிப்பை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. குளிர்ந்த நீர் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பை எரிப்பதை தடுக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பல்லில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பதால் மூளை உறைதல் பிரச்சனை ஏற்படும். இதனால் குளிர்ந்த நீரை தவிர்த்து, இயற்கையான பானங்கள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள லாம்.