வேலூர், ஜூலை 10-
வேலூர் சிப்பாய் புரட்சியின் 217ஆம் ஆண்டையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் வேலூர் அரசு அருங்காட்சியகமும் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்திய ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டி களுக்கான பரிசளிப்பு விழா வேலூர் கோட்டையிலுள்ள அருங்காட்சியகத்தில் மாவட்ட துணைத் தலைவர் முத்து.சிலுப்பன் தலைமையில் நடைபெற்றது.
தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
காப்பாட்சியர் க.சரவணன், தமு எகச மாவட்ட செயலாளர் எஸ்.சுரேந்திரன், பொருளாளர் லோகேஷ், கு.தருமன்(மின்சிறகுகள் கிளை), இராம.சுடர்க்கொடி, அ.கு.பாஸ்கர், கி.உமாநாத் (வேலூர் கிளை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.