districts

திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்

சென்னை, செப்.4- சென்னை திருவல்லிக் கேணி காவல் நிலையத்தில் இருந்த கைதி தப்பி ஓடி உள்ளார். திருவல்லிக்கேணி அசூதி கான் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்( 50). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2ஆம் தேதி இரவு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை சேர்ந்த மூன்று பெண்களை சவாரி ஏற்றிக்கொண்டு பல்ல வன் சாலை அருகே உள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சவாரிக்காக அந்த பகுதியிலேயே லோ கேஷ் காத்திருந்தார். அப்போது அங்கு போதை யில் வந்த இருவர் பணம் கேட்டு லொகேஷிடம் தக ராறில் ஈடுபட்டதாக தெரி கிறது. அப்போது பணம் தர மறுத்ததால் அவர் கள் வைத்திருந்த கத்தி மற்றும் கட்டையால் லோ கேஷை சரமாரியாக தாக்கி யுள்ளனர். இதில் காயம் அடைந்த லோ கேஷை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக லோ கேஷ் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து லொ கேஷை தாக்கி இருவரை சனிக்கிழமை (செப் 3) கைது செய்து, அவர்களி டம் விசாரணை நடத்தினர். அதில், இவர்கள் திருவல்க்க் கேணி பகுதியை சேர்ந்த தீனா 20 மற்றும் மணி கண்டன் 18 என்பதும், ஏற்கனவே இவர்கள் மீது மயிலாப்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட காவல் நிலை யங்களில் திருட்டு வழக்கு கள் நிலுவையில் இருப்ப தும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, நீதி மன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் 3.30 மணி யளவில் காவல் நிலை யத்தில் இருந்த கைதி மணி கண்டன் திடீரென கைவிலங்கை கழற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார். காவலர் கள் துரத்திய போதும் வேக மாக தப்பியோடியதாக கூறப் படுகிறது. இதனைய டுத்து தப்பியோடிய மணி கண்டனை காவல்ர்கள் தீவிர மாக தேடி வருகின்றனர்.

;