districts

போலி சான்றிதழ் தயாரித்து பணியில் சேர்த்த இருவர் கைது

போரூர்,பிப்.24- சென்னை கிண்டி - போரூரை இணைக்கும் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் கட்டு மான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது. அவருக்கு 5 வருடம் அனுபவம் உள்ளது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய இருவரும் வேலைக்கு சேர்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொறியாளர்கள் இருவரும்  கைது செய்தனர். இவர்கள் கடந்த மாதம் கிரேன் மூலம் இரும்பு கம்பிகளை லாரியில் ஏற்றும்போது அது மாநகர பேருந்து மீது விழுந்து ஓட்டுநர் நடத்துநர்உள்பட 3பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இதையடுத்து காவல்துறை யினர் சிவனாந்த், பொன் சந்திரசேகர் ஆகியோரை விசாரித்தபோது அவர்கள் போலியான சான்று கொடுத்து பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது.