தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் வேடம் அணிந்து பெண் உரிமை குறித்து பேசிய அனகாபுத்தூர் பகுதியை சார்ந்த சிறுவன் இளந்தமிழனை சனிக்கிழமையன்று (பிப்.26) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் நேரில் சென்று பாராட்டினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோதரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், ஹேமகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.