பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் வாகன ஓட்டி கள் உயிர்ப் பயத்தோடு பயணிக்கும் அவலம் உள்ளது. சென்னை மாநகரில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணி களை அவ்வப்போது முதலமைச்சர், அமைச்சர்கள், மேயர், தலைமை செயலாளர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த னர். இதன் காரணமாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சுமார் 80 விழுக்காடு பணிகள் முடிக்கப் பட்டன. இதனால் சென்னை மக்கள் பெருவெள்ளத்திலிருந்து தப்பித்த னர். இதில், நிறைவடையாத பணிகள் பணிகள் ஜனவரி மாதத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாய்கள் தரமின்றி அமைக்கப் பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள் ளன. குறிப்பாக, குறளகம் எதிரே என்என்சி போஸ் சாலையின் குறுக்கே மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. (இதில் தற்போது கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது) இந்த கால்வாயின் இருபுறமும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அதனை சரி செய்ய வேண்டிய அதி காரிகள், சிறிய இரும்பு தகடுகளை கொண்டு மூடி தனது கடமையை செவ்வனே செய்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள வியா பாரிகள் கூறுகையில், “இந்த சாலை யில் மழைநீர்க் கால்வாய் அமைத்த போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இருப்பினும், 3 மாதம் கூட தாக்குபிடிக்க முடி யாமல் மழைநீர் கால்வாயில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பள்ளத்தை சிமெண்ட் கலவை கொட்டி உடனடியாக சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள், மெலிதான இரண்டு இரும்பு தகடுகளை கொண்டு வந்து போட்டுவிட்டு சென்ற னர். 20 நாட்களை கடந்தும் பள்ளத்தை செப்பனிடும் பணியை செய்யா மல் உள்ளனர். தகடுகள் மீது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாக னங்களை செல்கின்றனர். வாக னங்கள் ஏறி செல்லும் போது உண்டாகும் இரைச்சல் பீதியை உண்டாக்கிறது. என்எஸ்சி போஸ் சாலையில் அதி களவு கனகரக வாகனங்கள், பேருந்து கள் செல்கின்றன. பாரம் தாங்காமல் இரும்பு தகடு உள்ளே வாங்கிக்கொண்டால் பெரும் விபத்து நிகழும் அபாயம் உள்ளது. இலகுரக வாகனங்கள் சிறிது வேகமாக சென்றாலே, அவ்வப்போது தகடுகள் நகர்ந்து விடுகின்றன. அந்த தகட்டை மீண்டும் எடுத்து, சரி செய்து, பள்ளத்தை மூடி அப்பகுதி வியாபாரிகள்தான் பெரும் விபத்து ஏற்படாமல் மக்களை பாதுகாத்து வருகின்றனர். சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் தரமற்ற முறையில் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் மீது அதிகாரிகள் ஏதாவது அதிகாரி கள் நடவடிக்கை எடுத்தார்களா? என தெரியவில்லை. கால்வாய் பணிக்காக ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நடைபாதை களையும், அதில் அமைக்கப்பட்டி ருந்த கருங்கல் தடுப்புகளையும் உடைத்தனர். அதையும் சரிசெய்யா மல் வைத்துள்ளனர்” என்கின்றனர். இதேபோன்று பிராட்வே லோன்ஸ்கொயர் பகுதியில் நான்கு சாலை சந்திக்கும் பகுதியில் மழை நீர்க்கால்வாய் அமைக்கும் பணி நிறை வடையாமல் உள்ளது. நெரிசல் மிகுந்த அந்த சாலை சந்திப்பின் ஓரத்தில், ஒரு பெரும்பள்ளம் உள்ளது. அந்த பள்ளத்தை தடுப்பு கள் அமைத்து எச்சரிக்கை செய்யா மல் திறந்த நிலையில் வைத்துள்ளனர். இரவு நேரம் என்றில்லாமல் வாகன நெரிசல் ஏற்படும்போது கூட வாகன ஓட்டிகள் தடுமாறி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. இதேபோன்று ஜாபர்கான் பேட்டை யில் இருந்த மழைநீர் கால்வாய் பள்ளத்தில்தான் செய்தியாளர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.கவாஸ்கர்