விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மாணவர்கள் இருவரை எச்சரித்த போலீஸ்
மீனம்பாக்கம்,அக்.17- சென்னை விமான நிலையத்திற்கு, வியாழக்கிழமை (அக்.17) பிற்பகல் 12:30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், “சென்னை விமான நிலையத்தில், கழிவறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. சற்று நேரத்தில் அது வெடிக்கும்” எனக் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதையடுத்து நடத்தப் பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என்று தெரிய வந்தது. இந்நிலையில், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தினர் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எண் சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒருவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது, அவரது மகனும், உறவினர் ஒரு வரின் மகனும் சேர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள் ளது தெரிய வந்தது. இருவரும் அப்பகுதியில் உள்ள வெவ்வேறு தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரிடமும் விமான நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், இரு வரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து எச்சரித்தனர். அதேபோல் மாணவர்களையும் கடுமையாக எச்சரித்தனர்.
அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை
சென்னை, அக். 17- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளா கத்தில் அக்.19 (சனிக்கிழமை) மற்றும் அக். 20 (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறு வனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏது வாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை (Natural Bazaar) நடத்தப்படுகிறது. இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் புத்தம் புதிய ஆடைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் இளம்பிள்ளை சேலைகள், பட்டு வேட்டி, சட்டைகள், விருதுநகர் காட்டன் புடவைகள், அரியலூர் வாரியங்காவல் காட்டன் புடவைகள், கோயம்புத்தூர் நெகமம் சேலைகள், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தயாரிக்கப்படும் நைட்டிகள், ஈரோடு போர்வைகள் மற்றும் துண்டுகள், திருப்பூர் T-Shirt, Night Wear போன்ற தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து ஆடை வகைகளும் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசி கள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படு கின்றன. மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்களும் இந்த இயற்கை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை சந்தைக்கு வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான உற்பத்திப் பொருட்களை வாங்கி மகிழ அன்புடன் அழைப்பதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெங்களூரு டெஸ்ட் நியூஸிலாந்து அபார பந்துவீச்சு 46 ரன்களில் சுருண்ட இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களில் சுருண்டது. பெங்களூரு வில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் பலத்த மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம் வியாழ னன்று நடைபெற்றது. 5 தங்க முட்டை டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. பிட்ச் தன்மையை திடமாக கணித்து நியூ ஸிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசியதால் இந்திய பேட்டர்கள் திணறினர். நியூஸி லாந்து அணியின் மூத்த வீரர்டிம் சவுத்தி ஒரு விக்கெட் எடுத்த பின்பு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க ஒதுங்கினார். டிம் சவுத்தி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இளம்வீரர்களான ஹென்றி,வில்லியம் இந்திய பேட்டர்கள் மீது பவுன்சர் கலந்த ஸ்விங் பந்துவீச்சு மூலம் தாக்கு தல் தொடுத்தனர். ஹென்றி - வில்லி யம் தாக்குதலால் நிலை குலைந்த இந்திய அணி 31.2 ஓவர் களில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (20), தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (13) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்து ஆட்ட மிழந்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கங்களில் பெவிலியன் திரும்பி னர். இதில் 5 தங்க முட்டைகளும் (விராட் கோலி, சர்பிராஸ் கான், கே.எல்.ராகுல், ஜடேஜா, அஸ்வின்) பொருந்தும். நியூசிலாந்து அணி தரப்பில் ஹென்றி 5 விக்கெட்டுகளை யும், வில்லியம் 4 விக்கெட்டுகளை யும், டிம் சவுத்தி ஒரு விக்கெட்டை யும் வீழ்த்தினர். நியூஸிலாந்து அணி நிதானம் பின்னர் தனது முதல் இன்னி ங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து நிதானமாக ரன் குவித்தது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து இருந்தது. வெள்ளியன்று தொடர்ந்து 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.