சென்னை, ஜூன் 28-
புதிய வசதியுடன் வாட்ஸ்அப் பிங்க் என்ற மேம்படுத்தப்பட்ட செயலி வெளியாகி உள்ளதாக, பயனர்களுக்கு குறுஞ் செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில் வாட்ஸ் ஆப் பிங்க் நிறமாக மாறி வருவதாக தகவல்கள் வெளிவந்தது. வாட்ஸ் ஆப் பிங்க் நிறத்தில் மாறியதும், உங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், ஓடிபி உள்ளிட்ட தகவல்கள் திருட வாய்ப்பு உள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாது காப்புடன் இருப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மும்பை சைபர் கிரைம் காவல் துறையினர் ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டுள்ளது.
பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர், ஐ ஸ்டோர் போன்ற தளங்களில் இருந்து மட்டுமே செயலி களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிகாரப் பூர்வமற்ற இணைய தளத்தில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என காவல் துறை யினர் சார்பில் அறிவுறுத் தப்பட்டுள்ளது.