பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ வேலூர் மாவட்ட நிர்வாகிகள் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனை சந்தித்து மனு அளித்து முதல்வரிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதேபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.சுதிர் ஆனந்த் ஆகியோரை சந்தித்தும் மனு அளித்தனர். இதில் உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், அ.சேகர் (அரசு ஊழியர் சங்கம், அக்ரி.இ.ராமன் (வேளாண்மை ஆசிரியர் சங்கம்), துரை.கருணாநிதி (ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கம்), ஆ.சீனிவாசன் (ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.