districts

img

நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு நிதி திரட்ட கலைநிகழ்ச்சி: ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை, செப். 8- நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு நிதி திரட்டும் கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்கிறார்கள் என்று சங்கப்பொருளாளர் கார்த்தி தெரி வித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு மற்றும் செயற்குழு  கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஞாயிறன்று(செப்.8) நடை பெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்த பொதுக்குழு  கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை  தலைவர்கள் பூச்சி முருகன், கரு ணாஸ் மற்றும் மன்சூர் அலிகான், ஸ்ரீமன்,  கோவை சரளா, சார்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட நடிகர் நடிகை கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதி க்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கார்த்தி, நடிகர் சங்க கடனை அடைப்ப தற்காக நடத்தப்படும் கலைநிகழ்ச்சி யில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சேர்ந்து நடிப்பதாகவும், நடிகர் விஜய் நிதியாக சங்கத்திற்கு ரூ.1  கோடி கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அறி வுறுத்தினார். அடுத்த ஆண்டு நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டமானது புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலை யில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஏற்கெனவே 2019-ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாக கமிட்டியின் கூட்டம் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.