சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூர், காமராஜ் நகரில் ரூ.2.90 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்பி, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், துணை மேயர் மு.மகேஷ் குமார், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.