சென்னை, நவ. 5- தீபாவளிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் வெயில் அடித்த தால் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்களுக்கு வசதியாக அமைந்தது. இதனால் ஞாயிறன்று (நவ. 5) காலையில் இருந்தே சென்னையில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல கடை களுக்கு வரும் பொதுமக்க ளின் எண்ணிக்கை அதி கரித்தது. இதனால் அனைத்து கடைகளிலுமே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது சென்னை தி.நகரில் கூட்ட நெரிசலை தடுக்க பாது காப்பு பணியில் காவல்துறை யினர் ஈடுபட்டனர். மேலும் கயிறு கட்டி மக்கள் கூட்டத்தை சீர் செய்தனர். தி.நகர் ரங்கநாதன் தெரு வில் கட்டுக்கடங்காத வகை யில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. தெரு முழுக்கவே பொதுமக்கள் தலைகளாகவே தெரிந்தன. நடக்கக்கூட இடம் இல்லாத வகையில் நெரிசல் அதிக மாக காணப்பட்டது. அதே போல் கடைகளுக்கு உள்ளேயும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடைகளிலும் விற்பனை அமோகமாக நடந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க போலீ சார் அதிக அளவில் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். 100 கேமராக்கள் தி.நகர் ரங்கநாதன் தெருவில் வழக்கமாக கண்காணிப்பு பணிக்காக 50 நிரந்தர சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தற்போது கூடுதலாக மேலும் 50 சி.சி.டி.வி கேமராக்கள் சனிக்கிழமை முதல் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று மாம்பலம் காவல் நிலை யத்தில் இருந்தே போலீ சார் கண்காணித்தனர். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி கொண்ட நவீன கேம ராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. புரசை, ராயபுரத்திலும் அமோக விற்பனை அதேபோல் புரசை வாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் புத்தாடைகள் வாங்க பொது மக்கள் திரண்டனர். தீபா வளிக்கு புத்தாடைக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுவது பட்டாசு தான். இதற்காக சென்னை தீவுத்திடலில் அரசு அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ள 55 கடைகளில் பல்வேறு வகை யான பட்டாசுகள் புதுபுது ரகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ300 முதல் ரூ1,100 வரை பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக விற்பனை யாளர்கள் தெரிவித்துள்ள னர்.