கள்ளக்குறிச்சி, டிச.7 - உளுந்தூர்பேட்டை அருகே அத்திப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம் ஏ.அத்திப் பாக்கம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 15க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடிசை அமைத்து வசித்து வருகின்ற னர். பலமுறை வலியுறுத்தி யும் இந்த இடத்திற்கு பட்டா வழங்கவில்லை. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தலை மையில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரை சந்தித்தனர். அப்போது, பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். கட்சியின் மாவட்ட செயற்குழு எம்.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் வி.ரகுராமன்,செல்வராஜ், ஜெயமூர்த்தி, அஞ்சலை, அர்ஜூனன், கிளைச் செயலா ளர் செண்பகம், பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.