districts

2-வது கட்ட திட்டப்பணியில் பார்க்கிங் வசதியுடன் மெட்ரோ ரயில் நிலையங்கள்

சென்னை, ஏப்.1- சென்னையில் மெட்ரோ ரயில் 2-வது திட்டப் பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது.   மாதவரம்- சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாத வரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ தூரத்துக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலில் 2-வது திட்டப் பணியில் எல்லா மெட்ரோ ரயில் நிலையங் களிலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வில்லை. பயணிகள் வசதிக்காக பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலை யங்களில் வாகனங்கள் நிறுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இந்த வழித்தடங்களில் புதிதாக அமைக்கப்படுகின்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது. ஒரு சில பெரிய நிலையங்கள், முனையங்க ளில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள்  நிறுத்தும் வசதி வழங்க திட்டமிட்டுள் ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிதாக அமையும் மெட்ரோ aரயில் நிலையத்தின் அளவை  பொறுத்து பார்க்கிங் வசதி விரிவாக  செய்யப்படும். இதற்காக கூடுதலாக நிலம் வாங்கப்படுகிறது. சில நிலை யங்களில் பார்க்கிங் இல்லா திருக்க லாம். ஏனெனில் அதன் தேவை இருக் காது. ரயிலில் இருந்து இறங்கிய வுடன் வீடு செல்ல பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ போன்ற வேறு ஒரு  வகையான போக்குவரத்து இல்லாத இடங்களில் நமது வாகனத்தில் செல்ல வாகன நிறுத்தம் அவசியமாகிறது என்று பயணிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக, பயணிகள் பேருந்து  நிலையம் மற்றும் சேரும் இடத்திற்கு இடையில் அல்லது அவர்கள் வசிக்கும் இடத்திற்கும் அருகிலுள்ள நிலையத்திற்கும் இடையில் செல்ல தனியார் போக்கு வரத்தை நம்பி யுள்ளனர். இது தொடர்பாக ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.