சென்னை, நவ. 3 - பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக்க வலியுறுத்தி வியாழனன்று (நவ.3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வியா பாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை மீது சுமார் 83 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருவழி பாதை கொண்ட மேம்பாலம், தாம்பரம் - விமான நிலையம் மார்க்கத்தில் ஒருவழிப் பாதை கொண்ட தாக திறக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் சாலை குறு கலாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பாலத்தை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும், மேம்பாலத்தின் கீழ் பகுதியில், மறைமலை அடிகள் பள்ளிக்கு எதிரே ஜிஎஸ்டி சாலையி லிருந்து இந்திரா காந்தி சாலைக்கு வாகனங்கள் திரும்பி செல்ல அனு மதிக்க கோரி கடந்த மார்ச் மாதம் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி யது. அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் கள் மனு அளித்தனர். இதனையடுத்து அமைச்சர் மே மாதம் மேம்பாலத்தை ஆய்வு செய்தார். ஐஐடிக்கு எதிரே உள்ள மேம் பாலத்தை பயன்படுத்துவது போன்று, பாலத்தின் இரு முனைகளிலும் உள்ள சென்டர் மீடியனை உடைத்து நெரிசல் நேரங்களில் இரு வழிப்பாதையாக மாற்றவும், ஜிஎஸ்டி சாலை - இந்திரா காந்தி சாலை சந்திப்பில் உள்ள தடுப்புகளை அகற்றவும் அறிவுறுத்தி னார். அமைச்சர் அறிவுறுத்தி 6 மாதங்களை கடந்தும் அதனை அதிகாரி கள் செயல்படுத்தவில்லை. ஜிஎஸ்டி சாலை - இந்திரா காந்தி சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க போக்கு வரத்து காவல்துறைக்கு நெடுஞ் சாலைத்துறை பணம் கொடுத்துள்ளது. அதன்படி சிக்னலை அமைக்காமல் உள்ளனர்.
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மறைமலை அடிகள் பள்ளி அருகே சாலை மறிய லில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத் தில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்வேல்முருகன், பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோ தரன் மற்றும் காந்தி (ஆட்டோ சங்கம்), ஜான்சி (மாதர் சங்கம்), சிந்தன், ஹேமக்குமார் (வாலிபர் சங்கம்), சந்திரன் (விவசாயிகள் சங்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்லாவரம் காவல்நிலையத்தில் பிரிவு 147, 148 களின் கீழ் வழக்கு பதிந்து, விடுதலை செய்தனர்.