districts

img

திடீர் மழையால் நெற்பயிற்கள் நாசம் வேதனையில் விவசாயிகள்

கண்டமங்கலம்,மே 29- கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தது. கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது பொதுமக்கள் நிம்மதி அடைந்தார்கள். சனிக்கிழமையன்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கியது திடீரென மாலை முதல் மேகத்தில் மாற்றங்கள் காணப்பட்டன. இரவு 8 மணி முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.