சென்னை, மே 10- பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் கொசத்தலையாறு திட்டம் மழைநீர் கால்வாய் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 20க்கும் மேற்பட்ட தெருக்களில் தொடர் இணைப்பு இல்லாமல் துண்டு துண்டாக கால்வாய் கட்டப் பட்டு பல மாதங்களாக முடிக்கப்படா மல் உள்ளது. மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் மண்டல அலுவலரிடம் செவ்வாயன்று (மே 9) புகார் அளித்தார். மண்டல அலுவலர் உடனடி யாக புதனன்று (மே 10) 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மேற்கொண்டார். உடனடியாக செயல் பட்ட மண்டல அலுவலருக்கு கவுன் சிலர் ஜெயராமன் 4ஆவது வார்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார். மேலும் அவர் இதுகுறித்து ஏற்க னவே மேயர், வட்டார ஆணையரிட மும் புகார் அளித்துள்ளார். வட்டார ஆணையர் பல நேரங்களில் தலை யிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். எர்ணீஸ்வரர் நகர் 3ஆவது, 4ஆவது தெரு, மாகாளியம்மன் கோயில் முதல் தெரு, பெருமாள் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு கிழக்கு, தெற்கு, பிருந்தாவன் நகர் 4ஆவது தெரு, காமராஜ் நகர் 4ஆவது தெரு, திரு வீதியம்மன் கோயில் 5ஆவது தெரு, மகாலஷ்மி நகர் பிரதான தெரு, முல்லை நகர் முதல் தெரு மற்றும் 2ஆவது தெரு, ராமநாதபுரம் 2ஆவது தெரு, ஜெய்ஹிந்த் நகர் பிரதான சாலை, முருகப்பா நகர் பாரதி தெரு, ராமநாதபுரம் 10ஆவது தெரு, கார்கில் நகர் 15ஆவது தெரு ஆகிய பகுதிக ளில் சக்தி கட்டுமான தனியார் நிறுவ னத்திற்கு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
ஆனால் பல தெருக்களில் பணி துவக்கப்படவே இல்லை. பல தெருக்களில் மழைநீர் கால்வாய்க்குள் செல்ல நீர்பிடிகுழி (கேட்ச் பிட்) அமைக்கவில்லை. மேலும் சாலைகள் சீரமைப்பு செய்யப் படவில்லை. பக்கிங்காம் கால்வாயில் இணைக்கும் சடையங்குப்பம் சாலை யில் முழுமையாக பணி முடிக்கப்படா மல் அரைகுறையாக இருப்பது இப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ஏற்கனவே மாநகராட்சி ஆணையர் சுகன்தீப்சிங் பேடி, தலைமை செயலா ளர் இறையன்பு ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பணிகளை உடனே முடிக்க ஆணையிட்டனர். வட்டார வடக்கு ஆணையர் சிவகுரு பிரதாப னும் அடிக்கடி வந்து ஆய்வு செய் தார். ஆனாலும் இந்த ஒப்பந்ததாரர் பணியை துரிதப்படுத்தாதது மட்டு மின்றி, புதிய இடங்களில் கால்வாயை தோண்டி சதவீத அடிப்படையில் பணியை மிகைப்படுத்தி காட்டுகிறார். புகாரை அடுத்து மண்டல அலுவ லர் நவிந்திரன் மாமன்ற உறுப்பின ருடன் இணைந்து ஆய்வை மேற் கொண்டார். மேற்கண்ட அத்துனை இடங்களையும் பார்வையிட்ட மண்டல அலுவலர் ஒப்பந்ததாரர் மீது நட வடிக்கை மேற்கொள்ள உத்தர விட்டார். மண்டல அலுவலருடன் செயற் பொறியாளர் தணிகைவேல், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் நாகராஜ், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா ஆகியோர் உடனிருந்தனர்.