districts

img

கன்னடபாளையத்தில் சிபிஎம் தண்ணீர் பந்தல் திறப்பு

காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தையொட்டி, தாம்பரம் பகுதி, கன்னடபாளையத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் தெற்கு கிளை சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் பந்தலை தொழிற்சங்க தலைவர் பெருமாள் திறந்து வைத்தார். கிளைச் செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, தொகுதிக்குழு உறுப்பினர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.