districts

img

இருசக்கர வாகனம்,கார் மீது ஆம்னி பேருந்து மோதல்

கடலூர்,நவ.9- கடலூர் அருகே பெரிய கங்கணாங் குப்பத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து பெரிய கங்கணாங்குப்பம் வந்தபோது, எதிரே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.  இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேர், கார் ஓட்டுநர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து ரெட்டிச்சாவடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த வர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.