districts

img

வேளாண் நிலத்தை பாழ்படுத்தும் அதிகாரிகள்: கிராம மக்கள் ஆவேசம்

திருவள்ளூர் ஜன 12- குடியிருப்பு பகுதிக ளுக்குள் வெள்ள நீர் புகுந்து வீடுகளையும், விவசாயத்தையும் சேதப்படுத்தும் அளவிற்கு நீரோடையின் கரை அமைத்துள்ளதற்குபொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொன்னேரி அருகில் உள்ள ஏலியம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல்,  பயிர் சாகுபடி செய்து வரு கினறனர். விவசாயி சுதாக ரின் விவசாய நிலத்தை ஒட்டி பொதுப்பணித்துறையினர்  3 அடி அகலத்தில்,  6 அடி ஆழத்திற்கு இயந்திரங்கள் மூலம்  சுமார் 1 கி.மீ தூரத்திற்கு பள்ளம் எடுத்து கரை அமைத்துள்ளனர். அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கையால் அப்பகுதி குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்து வீடுகளை சேதப் படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் விவசாய நிலங்களிலும் வெள்ள நீர்  தேங்கி விவசாயமும் முற்றி லும் பாதிக்கும் நிலை யுள்ளது. இதனால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரிய பிரகாஷ் ஆகி யோர் கூறுகையில், “ஆக்கிர மிப்புகளை அகற்றுவதாக கூறி ஓடையை ஒட்டி கரை  அமைத்துள்ளனர். இதனால், வெள்ள நீர் தேங்கி அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் அந்த கரையை முழுமையாக அகற்ற வேண்டும்” என்றனர். ஓடையின் அருகில்  கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்ட சில தனி நபர்கள்  ஆக்கிரமிப்பு செய் துள்ள அனைத்து அரசு  நிலங்களையும் மீட்டெடு க்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்  பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.