காஞ்சிபுரம், மே 28 -
தமிழ்நாடு பாலர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் இருநூறுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம் மற்றும் எழுதுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி (மே.28) ஞாயிறன்று நடை பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் வி.சிவப்பிரகாசம் தலை மையில் முசரவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சு.சந்தர ராஜன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட துணைத்தலைவர் வி.ஜெயந்தி, ஸ்டான்லி மாருத்துவக் கல்லூரி மாணவி எல்.பி.லாவண்யா, தினமணி நிருபர் கே.ஜெகஜோதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்திக், மாநகரத் தலைவர் எம்.சூரியபாரதி, மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏங்கல்ஸ், து.கோகுல் ஆகி யோர் மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும் கல்வி உபகரணங்களை யும் வழங்கினர். காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கே.சங்கர், இ.சங்கர், இ.சம்பத், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட நிர்வாகி கோ.வேலாயுதம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.