districts

img

சென்னை ஐஐடி வளாகத்தில் வாகனத்தில் பயணிக்க புதிய கட்டுப்பாடு

சென்னை,செப்.7- இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் கல்வி நிறு வனங்களில் ஒன்று ஐஐடி சென்னை. இதன்  வளாகம் 617 ஏக்கரில் மிகவும் பிரமாண்ட மாக அமைந்துள்ளது. ஐஐடி சென்னையின் முதன்மை நுழைவாயில் சர்தார் படேல் சாலையில் இருக்கிறது. கிண்டி தேசிய பூங்காவில் இருந்து பிரித்து சென்னை ஐஐடி உடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் குரங்குகள், மயில்கள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் காணப் படுகின்றன. அதுமட்டுமின்றி 300 வகையான மரங்கள், செடிகள் உள்ளன. அதனுடன் 100க்கும் மேற்பட்ட பறவைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வந்து செல்கின்றன. ஐஐடி  சென்னை வளாகத்தில் பல்வேறு இளங் கலை, முதுகலை படிப்புகள் கற்பிக்கப் படுகின்றன. மான் உயிரிழப்பு எனவே மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் என பலரும் ஐஐடி சென்னை  வளாகத்தில் சென்ற வண்ணம் இருப்பார். மிகப்பெரிய நிலப்பகுதி என்பதால் வாகனங் களில் அதிகம் பயணிப்பதை பார்க்க முடி கிறது. சமீபத்தில் கருப்பு வெள்ளை நிற  மான் ஒன்று வாகனம் மோதி சென்னை ஐஐடி  வளாகத்தில் உயிரிழந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மான் உயிரிழந்த விவகாரத்தில் அடுத்து, வாகனங்களின்  பயண வேகம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.