districts

img

அதியமான் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம்

ஓசூர், ஆக.29- ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம் வானூர்தி பொறியியல் துறை சார்பில் நடைபெற்றது. துறை தலைவர் அறிவுடை நம்பி வரவேற்றார். மாணவர்கள் உருவாக்கிய மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றது. இதனை முதல்வர் ஜி.ரங்கநாத் பார்வையிட்டார். அப்போது, சந்திரயான்-3 மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனையை விளக்கினார். துறை பேராசிரியர் முனைவர் வெங்கடேசன் செல்வம்,டீன் கல்வியாளர்கள் பேராசிரியர்கள் முத்துசாமி, முனைவர் பிரபு, சீனிவாசன், புஷ்பராஜ், ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.