districts

img

அதியமான் கல்லூரியில் தேசிய நூலகர் தின விழா

கிருஷ்ணகிரி,ஆக.16- ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் முனைவர்  எஸ்.ஆர். ரங்கநாதனின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு  தேசிய நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது.கல்லூரியின்  பிரம்மாண்ட நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு முதல்வர் முனைவர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கினார். தலைமை நூலகர் முனைவர் ஜி.ஏ. தேவ பாலகன் நூலகத்தின், புத்தகங்களின்,நூலகர் தினத்தின் முக்கியத்து வம் குறித்து பேசினார். அதியமான் கல்லூரியில் தன்னாட்சி  முதல்வர்,எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி,மக்கள் தொடர்பு அலுவலர் பேராசிரி யர் இனிகோ பாபு,பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.