districts

img

தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

சென்னை,அக்.15- சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியில்  கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் 11வது தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது.  - “Ubertech 2023” என்ற பெயரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் சாராத மற்றும் கேமிங் நிகழ்வுகளுடன் தொடர் பட்டறைகள், இணைய கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை துணைத்தலைவர் (வடக்கு) எம்.எஸ்.ராவட் செயற்கை நுண்ணறிவின் ராணுவ பயன்பாடுகள் பற்றி பேசினார்.  சைபர் பாதுகாப்பு நிறுவன தலைவர் ஜனகராஜ் இணைய பாதுகாப்பு துறையில் நிஜ உலக தாக்கங்கள் குறித்து விளக்கினார். முதல்வர் டாக்டர் சி.வி.ஜெயக்குமார், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.பிரசன்னா தேவி உள்ளிட்டோரும் பேசினர்.