விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது தென்பேர் கிராமம். கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள பல தெருக்கள் சிமெண்ட் சாலைகளாக மாறினாலும், இந்த நடுத்தெருவில் முறையான வடிகால் வசதி இல்லை என்பதால் எந்த நேரமும் வீடுகளின் கழிவு வெளியே தெருவில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் சாலைகளில் ஆங்காங்கே சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.