districts

img

சென்னையில் டிரோன் மூலம் கொசு ஒழிப்பு பணி துவக்கம்

சென்னை, பிப்,12-  சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்ட மிட்டு உள்ளது. கொசுக்கள் உற்பத்தியும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணி களை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப் படையில்  இந்த பணியை இந்த மாதம்  இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரி கள் செய்து வருகின்றனர். சென்னையில் 248 கி.மீ. தூரத்திற்கு  நீர்வழிப் பாதைகள் உள்ளன. இவற்றில்  ‘டிரோன் மூலம் கொசு மருந்து அடித்து  கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர  சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கப்பட உள்ளது. 6 டிரோன்கள் மூலம் நவீன தொழில்  நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி  ஒருவர் கூறியதாவது:- புயல், மழை யால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி  வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம்  இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலை களில் படகுகளில் சென்று குப்பைகளை  அகற்றுதல், ஆகாய தாமரை அகற்றப் படும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தி யாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும். இது தவிர 3,300 பணியாளர்கள்  மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது. வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக் கப்படும். மேலும் கொசுக்கள் உற்பத்தி யாகும் மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை திறந்து கொசு மருந்து  அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில்  கொசுக்கள் இன்னும் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் அவற்றை தொடர்ந்து மருந்து அடிப்பதன் மூலம் ஒழிக்க முடியும். இவ்வாறு அவர்  கூறினார். சென்னையில் 1,600 மழை நீர்  கால்வாய்கள் உள்ளன. தற்போது கூடு தலாக 600 கால்வாய் கள் கட்டப்பட்டு மொத்தம் 2,200 கால்வாய்கள் வழியாக மழைநீர் வெளி யேறுகிறது. மழைக் காலங்களில் கொசு  பொதுவாக பெருகுவது இல்லை. மழை  முடிந்த பிறகு தான் அதிகளவில் உற்பத்தியாகும். மழை நீர் கால்வாய் களின் மூலம் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மழை நீர் கால்வாய்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறதா என  ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டல்கள்,  டீக்கடைகள், தொழில் நிறுவனங்களின்  கழிவு நீர் மழைநீர் கால்வாய்களில்  விடப்படுவதால் மழை இல்லாத காலத்தில் கொசு உற்பத்திக்கு காரண மாக அமைகிறது.  எனவே மழைநீர் கால் வாய்களில்  தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தி னால் கொசுக்கள் உற்பத்தி ஆவதை  தடுக்க முடியும். மாநகராட்சி அதிகாரி கள் மழை நீர் கால்வாய்களையும் இக்காலக் கட்டத்தில் கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.