districts

img

பர்கூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி, ஜூன் 22-

    கிருஷ்ணகிரி மாவட்டம்,பர்கூர் வட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நகர்,நேரு நகர், கார குப்பம், பர்கூர், பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.  

    டி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர்  ஜி.கே.நஞ்சுண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் வி.சண்முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், கிருஷ்ணகிரி வட்டச்செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் லெனின் முருகன், இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.டி.சீனிவாசன், இளைய ராஜா, எல்லப்பன்,இம்ரான் சேக், இஸ்மாயில் சக்கரவர்த்தி, பாசில் பாஷா, மல்லிகா சவீதா, திருப்பதி தலைமையில் 70 பெண்கள் உட்படநூற்றுக்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.