எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது. மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என்றனர். இதையடுத்து ஆட்சியர் பழனி, டிஐஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, திண்டிவனம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிறகு, பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கலைந்து சென்றனர்.