districts

img

சென்னை பள்ளிகளுக்கு நவீன மேசைகள்

சென்னை, ஜூலை 12 - சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் சென்னை பள்ளிகளுக்கு 291 நவீன மேசைகள் வழங்கப்பட்டுள்ளது. தில்லி மாநில அரசுப் பள்ளிகளில் உள்ளதை போன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் நவீன மேசைகளை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, 108 சென்னை பள்ளிகளுக்கு சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 9.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரத்து 279 மேசைகளை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணி ஆணை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆயிரத்து 291 நவீன மேசைகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், 1 முதல் 12ம் வகுப்புகள் வரை உள்ள வகுப்புகளுக்கு ஏற்றார்போல்  மேசைகளின் அளவு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை கவரும் வகையில் 1 முதல் 3ம் வகுப்பு வரை மஞ்சள் நிறத்திலும், 4 முதல் 5 வகுப்பு வரை ஆரஞ்சு நிறத்திலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை இளஞ்சிவப்பு நிறத்திலும், 9 முதல் 12ம் வகுப்பு வரை நீல நிறத்திலும் மேசைகள் வழங்கப்பட்டுள்ளது.