கடலூர், பிப்.15 - கடலூர் ஒன்றியம் கே.என். பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு மூன்றாம் கட்ட முகாமை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.என்.பேட்டை பவானி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, சின்ன காரைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கம்பளி மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவாணிக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, தீர்த்தனகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்”திட்டத்தின் கீழ் 3ஆம் கட்ட சிறப்பு முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.