districts

img

தமிழ்நாட்டில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது!

சென்னை, நவ. 3 - தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் புதிய சங்கக் கட்டடம் திறப்பு விழா ஞாயிறன்று (நவ.3) கோபாலபுரத்தில் நடைபெற்றது. கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகை யில், கொரோனா உருமாற்றங்களை பெற்று இன்றளவும் தொடர்கிறது. வீரியம் குறைந்த கொரோனா வைர சாக இருந்தாலும், பாதிப்புகள் இருக்கி றது. வைரஸ்களோடு போராடி தான் வாழ வேண்டிய நிலை உள்ளது. இதிலி ருந்து காப்பவர்களாக சுகாதார ஆய்வா ளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் நோய் தடுப்பு முயற்சிகளுக்கு பேருதவியாக சுகாதார ஆய்வாளர்கள் உள்ளனர் என்றார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெங்கு  பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பை கட்டுப் படுத்த அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் காரணமாக தமிழ் நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுப் பாட்டில் உள்ளது. இதுவரை 7 இறப்பு கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப் படும் நபர்களையும் சேர்த்தே கணக் கெடுப்பு செய்யப்படுகிறது. டெங்கு கொசுவின் வீரியத்தை கண்டுபிடிக்கும் ஆய்வகம் ஒன்றையும் அரசு அமைத் துள்ளது. டெங்குவின் பாதிப்பை குறை ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள் சொல்லும் அறிவுரை களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். சுகாதார ஆய்வாளர்கள் காலி பணி யிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் முடிந்து விட்டது. அனைத்து சங்கங்களுடனும் விரைவில் கலந்து பேசி ஓரிரு வாரங்க ளில் 1066 சுகாதார ஆய்வாளர் பணி யிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் சோ.ஜெயக்குமார் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சே.வசந்தகுமார் வரவேற் றார். பொதுச்செயலாளர் தீ.பத்ம நாப ராவ் அலுவலர்கள் கோரிக்கை களை விளக்கி பேசினார். பொருளாளர் வை.மணிவண்ணன் நன்றி கூறினார்.