districts

சென்னை முக்கிய செய்திகள்

மெட்ரோ பணி - எம்.எம். காலனியை   4 மாதத்தில் காலி செய்ய உத்தரவு

சென்னை, பிப்.4 சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.  இதை தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடை பெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கு என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் மாதவரம் பால்பண்ணை- சோழிங்கநல்லூர் ரயில் பாதை திட்டத்தில் ஒரு பகுதியான மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரயில் பணி வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலை யில் மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை காலி செய்து கொடுக்க அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி லட்சுமி உள்ளிட்ட 3 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க வேண்டும். மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

ஜிபிஎஸ் நோய்த் தொற்றால்  சென்னையில் சிறுவன் உயிரிழப்பு

சென்னை, பிப்,4- திருவள்ளூரை அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் 9 வயது மகன் மைதீஸ்வரன்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கால்களில் உணர்விழப்பு ஏற்பட்டதால் திரு வள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு ஜிபிஎஸ் நோய் இருப்பது தெரியவந்தது. சிறுவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயி ரிழந்தான். இந்த நோயை கண்டு பயப்பட வேண்டாம். கரோனா போல், இது தொற்று நோய் அல்ல. சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடையலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் குணமடைந்து விடுகின்றனர். உடலில் வேறு சில பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில் ஓரிருவர் உயிரிழக்க நேரிடுகிறது. ஜிபிஎஸ் நோயின் தீவிரத்துடன் இதய பிரச்சினையும் இருந்த தால் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவத்துள்ளனர்.

சிறைவாசிகளின் ஓவியக் கண்காட்சி 
சென்னை டிபிஐ வளாகத்தில் பிப்.8 துவக்கம்

சென்னை. பிப்.4- சென்னை புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் வரைந்த ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி சென்னையில் வரும் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது.  நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கிய சங்கம் அரங்கில் இந்த கண்காட்சிக்கு சென்னை புகைப்பட பைனாலே  அமைப்பு சூசம்மா அறக்கட்டளை யுடன் இணைந்து  ஏற்பாடு செய்துள் ளது.  பிப்ரவரி 8 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடை பெறும்.  சிறைக் கைதிகளுக்கு ஓவிய பயிற்சி வழங்குவதற்காக ஒரு வருடத்திற்கு முன்பு சிறையில் கலை (ஆர்ட் இன் ப்ரிசன்)  திட்டம் தொடங்கப்பட்டது. புழல் மத்திய மத்திய சிறையில் 50   சிறைவாசிகளுக்கு காட்சி கலை,  இசை மற்றும் நாடகப் பயிற்சி அளிக்கப்பட்டது.  22 அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் மற்றும் பயிற்றுவிப்பா ளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எட்டு மாத காலப் படிப்பில் பலர் ஆர்வத்து டன் கலந்துகொண்டனர். சிறை ஓவியக் கண்காட்சியில் நிகழ்ச்சி நிரல் வருமாறு: பிப்.8: டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி, பிப். 15:  சங்கீத பைத்தியம்: ஒரு இசை நாடகம், மார்ச் 1: பறை கானா ஒளி இசை நிகழ்ச்சி,மார்ச் 15: ஒரு லினோகட் ஓவிய பட்டறை.

குடியரசு தின என்சிசி முகாமில் அசத்தல்
தமிழக அணியினருக்கு துணை முதல்வர் பாராட்டு

சென்னை,பிப்.4- தில்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகா மில் நடைபெற்ற திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற என்.சி.சி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை களையும், தமிழ்நாடு அளவில் சிறப்பாக செயல்பட்ட கோயம்புத்தூர் குழும தலைமையகத்திற்கு முதலமைச்சர் பதாகையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில்  செவ்வாய்கிழமை (பிப்.4)  நடைபெற்ற விழாவில் இதனை அவர் வழங்கினார்.  பின்னர் கலைவாணர் அரங்கில் தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவ, மாணவிகள் அமைத்த கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தேசிய மாணவர் படை மாணவ, மாண விகள் அகில இந்திய, சர்வதேச அளவி லான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன ரக துப் பாக்கியின் திறன் மற்றும் செயல் பாடு குறித்து தேசிய மாணவர் படை மாணவியின் விளக்கத்தை கேட்ட றிந்தார். மேலும் விதைப்பந்துகள் மூலம்  மலைப்பகுதியில் பசுமைப்பரப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் தேசிய மாணவர் படையின் சமூகப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.  தொடர்ந்து கலைவாணர் அரங்கின் முன், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகா மில் பங்கேற்ற தமிழ்நாட்டின் தேசிய மாணவர் படை (என்.சி.சி) அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவி களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் துணை உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், என்சிசி  இளைஞர்களை சந்திக்கும் போதெல்லாம்  ஒரு புதுவித உற்சாகம் ஏற்படும். ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்ற முழக்கத்தை முன் வைத்து தன்னலம் பாராமல்  நீங்கள் செய்கின்ற சேவைகள் என்றைக்கும் போற்றத்தக்கவை.     மக்கள் சேவையில் மட்டுமல்ல, விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழ்நாடு NCC இளைஞர்கள் தொடந்து பல சாதனைகளை படைத்து வருகின்றீ ர்கள். குறிப்பாக, கடந்த ஆண்டு நடை பெற்ற தமிழ்நாடு மாநில 49வது துப்பாக்கி சுடும்  சாம்பியன் போட்டியில் 14 தங்கம், 19 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டு வீரர்கள் சாதனை படைத்திருக் கின்றீர்கள். அதற்கும், இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.