137ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு சார்பில் நெய்வேலியில் மேதின பேரணி திங்களன்று (மே 1) நடைபெற்றது.
137ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு, ஏஐடியுசி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மாதையன் ஆகியோர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஸ்ரீதரன் உட்பட பலர் உரையாற்றினர். முன்னதாக, ஊர்வலம் நடைபெற்றது.
137ஆவது மே தினத்தையொட்டி திருவண்ணாமலையில் ஊர்வலம் நடைபெற்றது. அதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் இ.பொன்முடி, ஏஐடியுசி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி, சிஐடியு நிர்வாகிகள் நாகராஜன், காங்கேயன், ஏஐடியுசி நிர்வாகிகள் ராஜேந்திரன், முத்தையன் ஆகியோர் பேசினர்.
137ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு, ஏஐடியுசி சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஏ.இன்பஒளி ஆகியோர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் சிறைப்புரையாற்றினார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.சவுரிராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் மற்றும் பலர் பேசினர்.