ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி போளூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் இரா. ரவிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், பி. செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் சிவாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.