விழுப்புரம், மார்ச் 3- விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ரேகா மதி தலைமையில் காவல்துறையினர் வேலியம்பாக்கம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் வேலியம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு அதில் கொண்டு வந்த சாக்கு மூட்டைகளை வீட்டிற்குள் கொண்டு சென்றார். சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 52 சாக்கு மூட்டைகளில் 2,600 கிலொ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பதுக்கிய அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.