சென்னை, டிச. 16- சென்னை அருகே மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சென்னை மணலி தொழிற் சாலை அதிகம் உள்ள பகுதியாகும். அங்கு எண்ணெய் நிறுவனம் மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு ஒன்றிய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அடிக் கடி எண்ணெய் கழிவுகள் தீப்பற்றி எரிவது வழக்க மான ஒன்றாகும். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை (டிச. 16) திடீரென தீ விபத்து ஏற்பட்ட தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நிறுவனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்தை தொடர்ந்து நிறுவனத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட தீய ணைப்பு வாகனங்கள் உதவி யுடன் தீயை அணைத்தனர். சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்த பரபரப்பு அடங்கு வதற்குள் தீ விபத்து ஏற்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.