எல்ஐசி-யின் 5 விழுக்காடு பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று (மார்ச் 10) சென்னை அண்ணசாலை எல்ஐசி அலுவலகம் முன்பு ஊழியர்கள் ‘சுடர் ஏந்தி’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத்தலைவர் கே.சுவாமிநாதன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க சென்னை பகுதி-1ன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் மற்றும் ஆ.பிரியதர்ஷிணி எம்.சி. உள்ளிட்டோர் பேசினர்.