பல்லடம், ஏப்.6- பல்லடம் மேற்கு ஒன்றி யத்திற்கு உட்பட்ட பகுதிக ளில், பாஜக மற்றும் அம முகவைச் சேர்ந்த 140 க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லேக வுண்டம்பாளையம் மற்றும் சித்தம்பலம் ஊராட்சியில் இருந்து 140 க்கும் மேற்பட்டோர் பாஜக மற்றும் அமமுக போன்ற மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா முன்னிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ், மாவட்ட துணை செயலாளரும், பொங்கலூர் யூனி யன் பெருந்தலைவருமான குமார், பல்லடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, பல்லடம் சட்டமன்ற தொகுதி பொறுப் பாளர் கோகுல் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.