districts

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை  அகற்றுவோம்  கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேச்சு

திருவள்ளூர், மார்ச் 25- திருவள்ளூர் மக்களவைத்தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில்  இந்தியா கூட்ட ணியின் சார்பில் ஆலோசனை கூட்டம் திங்களன்று (மார்ச் 25)  கவரைப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது, தமிழ்நாட்டில் கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களை வந்து  பார்க்காத,   ஒரு பைசா நிவாரணம் கூட கொடுக்காத மோடி,  தற்போது   ஓட்டுக்காக   5 முறை தமிழ்நாட்டிற்கும் வந்துள்ளார்.  இப்படி பாதிக்கப்பட்ட  மக்களை வஞ்சித்த, ஒன்றிய பாஜக அரசை, பாசிச மோடி அரசை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இந்தியா கூட்டணியில் உள்ள  அனைவரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்திலின் வெற்றிச் சின்னமான கை சின்னத்திற்கு  கடந்த தேர்தலை விட அதிகப்படியான வாக்குகளை சேகரிக்க வேண்டும். 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.பி.சிவாஜி, தகவல் தொழில்நுட்ப அமைப்பின் மாநில துணைத்தலைவர் சி.எச்.சேகர், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன், அயலக அணியின் மாநில துணை நிர்வாகி கன்னிகை ஸ்டாலின்,  மாவட்ட அமைப்பாளர் பகலவன், பொருளா ளர் ரமேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.நீலமேகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையத் இப்ராகிம், திக நிர்வாகி உதயகுமார், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் தேசிங்குராஜ் உட்பட பலர் பேசினர்.