கிருஷ்ணகிரி, ஜன. 21- தமிழக அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். தமிழ் மொழியின் தொன்மை மற்றும் ஆட்சி மொழியின் இன்றியமையாமை குறித்தும், அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆட்சி மொழி வரலாறு, சட்டம், ஆட்சி மொழி ஆய்வு முறைகள், நடவடிக்கைகள் குறித்தும், மொழி பயிற்சி எனும் தலைப்பில் தமிழ் மொழியில் பிழையின்றி எழுதுதல் மற்றும் இலக்கணம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை கிருஷ்ணகிரி மாவட்ட உதவி இயக்குனர் பவானி, உதவி இயக்குனர் புலவர் ஆறுமுகம், மேனாள் உதவி இயக்குனர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.